Wednesday 8th of May 2024 06:42:56 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஆப்கான் சிறைச்சாலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள்  நடத்திய தாக்குதலில் 29 போ் பலி ; பலா் தப்பியோட்டம்!

ஆப்கான் சிறைச்சாலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 போ் பலி ; பலா் தப்பியோட்டம்!


ஆப்கானிஸ்தான் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய திடீா் தாக்குதலில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலை அடுத்து சிறையில் இருந்த நூறுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்தச் சிறையில் இருந்த 1,793 கைதிகளில் பெரும்பாலானவர்கள் ஐ.எஸ். மற்றும் தலிபான் தீவிரவாத அமைப்புக்களைச் சோ்ந்தவா்களாவா். இவா்களை விடுவிக்கும் நோக்கிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சிறையில் இருந்து ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பியோட முயன்றபோதும் தாக்குதலைத் தொடா்ந்து இடம்பெற்ற தேடுதலில் 1025 கைதிகள் பிடிக்கப்பட்டு மீண்டும் சிறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு அஞ்சி தப்பியோடி மறைந்திருந்த 430 போ் மீட்கப்பட்டுள்ளனர் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இத்தாக்குதலைத் தொடா்ந்து அவா்களுக்கும் ஆப்கான் படையினருக்கும் இடையே இன்று திங்கட்கிழமை வரை சுமாா் 20 மணி நேரங்கள் மோதல் நீடித்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறை நுழைவாயிலில் கார் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொண்டப்பட்டன. தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தியதாக நங்கர்ஹார் மாகாண செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆப்கான் படையினரின் பதில் தாக்குதலில் 8 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

எனினும் இந்தத் தாக்குதலில் எத்தனை போ் கொல்லப்பட்டுள்ளனர். எந்தனை போ் சிறையில் இருந்து தப்பியோடியுள்ளனா் என்ற முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE